கேரளா: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் காரணமாக கேரளத்தில் பருவமழை தொடங்குவது தாமதமாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.