விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3பேர் உயிரிழந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். விபத்து தொடர்பாக ஊராம்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளர் கடற்கரை, போர்மென் காளியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை ஒப்பந்ததாரர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.