சிவகங்கை, ஏப்.29: சிவகங்கை நகரில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை நகராட்சி சார்பில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை நகரில் உள்ள வார்டு எண் 27, 21, 17, 11, 4, 2, 3, 16 ஆகிய வார்டுகளில் தார்ச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சிவகங்கை அரண்மனை வாசல் முன் தார்ச்சாலைகள் போடும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாண்டீஸ்வரி, நகர் மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், வீனஸ் ராமநாதன் மற்றும் ராஜ அமுதன், சண்முகராஜன், வீரகாளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை நகராட்சியில் ரூ.95 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
previous post