சென்னை: தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அக்.20-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தினசரி செல்லும் 2,100 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் 813 என மொத்தம் 2 நாட்களில் 5,664 பேருந்துகள் இயக்கபட்டன. வார விடுமுறை, ஆயுதபூஜையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டன.