Friday, July 11, 2025
Home செய்திகள் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கில் வரும் 22ம் தேதி குற்றச்சாட்டு பதிவு: அமர்வு நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கில் வரும் 22ம் தேதி குற்றச்சாட்டு பதிவு: அமர்வு நீதிமன்றம் உத்தரவு

by Ranjith

சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 22ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என்றும் விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவையும், அசல் ஆவணங்கள் கோரிய மனுவையும், ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கில் வரும் 22ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ளதால் அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi