சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விடுதலை போராட்ட வீரராக தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தியாகராயர் நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் தகனம் செய்யப்பட்டது.