Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

75 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையில்லை : ஒன்றிய அரசு

டெல்லி: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரி செலுத்து தேவையில்லை என்ற செய்தியை, மகாராஷ்டிர மூத்த குடிமக்கள் கூட்டமைப்பின் செயலர் சுரேஷ் போட்டே வெளியிட்டார்.

இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த ஒன்றிய அரசின் உண்மை கண்டறியும் குழு, இது போலியான தகவல் என்று தெரிவித்துள்ளது.இது தொடர்பான விளக்கத்தில் “75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானத்தில் இருந்து மட்டுமே வருமான வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.வரிகள் பொருந்தும் மூத்த குடிமக்களின் வருமானத்தைக் கணக்கிட்ட பிறகு குறிப்பிட்ட வங்கியால் அவர்களுக்கு தகுதியான விலக்குகள் அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.