சென்னை :சீமான் மீதான புகாரில் நடிகை விஜய லட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு எடுத்துள்ளனர். நேற்று 8 மணி நேரம் நடந்த விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜய லட்சுமி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய லட்சுமி அளித்த புகாரில் 2011ம் ஆண்டு ஏற்கனவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.