குமரி: கடல் சீற்றம் காரணமாக 3வது நாளாக கன்னியாகுமரி நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. குளச்சல், முட்டம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தால் குளச்சல், முட்டம் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.