சென்னை: பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம். கல்லூரி மாணவர்களும் கடந்த ஆண்டின் பயண அட்டையை காண்பித்து பேருந்தில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.