Sunday, June 22, 2025
Home செய்திகள் அறிஞர்கள், படைப்பாளர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

அறிஞர்கள், படைப்பாளர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

by Arun Kumar

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அறிஞர்கள், படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2024ம் ஆண்டுக்கான 5 வகை விருதுகள் மற்றும் தூயதமிழ் பற்றாளர் பரிசுக்கு தகுநிறை தமிழறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

* தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை)

* வீரமாமுனிவர் விருது (ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை)

* தூயதமிழ் ஊடக விருது (அச்சு ஊடகம், காட்சி ஊடகம்) – ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மதிப்பிற்குரிய தங்கப்பதக்கம், தகுதியுரை

* பாவலர் விருது (மரபுக்கவிதை, புதுக்கவிதை) – (ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மதிப்பிற்குரிய தங்கப்பதக்கம், தகுதியுரை)

* தூயதமிழ் பற்றாளர் விருது (ரூ.20 ஆயிரம், பாராட்டு சான்றிதழ்)

* தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு (ரூ.5 ஆயிரம், பாராட்டு சான்றிதழ்) வழங்கப்படும்.

http://sorkuvai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பி, இயக்குநர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலகக் கட்டிடம், முதல் தளம், எண்: 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் வழியாகவோ வரும் 30.8.2024க்குள் அனுப்ப வேண்டும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi