சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: அக்டோபர் 13, விருதுநகர் சங்கரலிங்கனார் நினைவுநாள்.“வீரத்தியாகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தை தருவதாக அமைதல் வேண்டும். தியாகிக்கு தலைவணங்குவோம்! தாயகத்துக்கு பணிபுரிவோம்” என்றார் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாடு உள்ளமட்டும் சங்கரலிங்கனார் நினைவுகூரப்படுவார்.