தேவையானவை:
நாரத்தங்காய் – 2,
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நாரத்தங்காயை நறுக்கி வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். பிறகு, நாரத்தங்காயை எடுத்து வெயிலில் காயவைக்கவும். மாலையில் இதை எடுத்து பெரிய பாத்திரத்தில் போடவும், காலையில் நாரத்தங்காயை திரும்ப வெயிலில் காயவிடவும். இப்படியே ஒரு வாரம் வரை காயவிட்டால்… உப்பு நாரத்தங்காய் ஊறுகாய் ரெடி.