சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். பட்டாசு வெடித்ததில் செல்வராஜ்(34), கார்த்தி (12), தமிழ்ச்செல்வன் (11), லோகேஷ் (20) ஆகியோர் பலியாகினர். திருவிழாவுக்காக இருசக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பட்டாசுகள் வெடித்துச் சிதறின. பட்டாசு வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் என்ற இளைஞரும் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழப்பு
0