சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். சக்திவேல் சென்ற இருசக்கர வாகனமும், கோபிநாத் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இரு இருசக்கர வாகனங்களும் மோதிக் கொண்டது தொடர்பாக இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் இளைஞர் கோபிநாத் (32) உயிரிழந்த நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.