சென்னை: மணிப்பூர் மக்களுக்கு உதவ ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் வழங்குமாறு மணிப்பூர் முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மணிப்பூரில் உள்ள தமிழர்கள் உயிருக்கும் உடைமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் 50,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது. தார்பாலின், படுக்கை விரிப்பு, கொசுவலைகள், மருந்துகள், நாப்கின், பால் பவுடர் போன்றவற்றை வழங்கத் தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.