Wednesday, May 14, 2025
Home செய்திகள்Banner News தமிழ்நாட்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைவு

தமிழ்நாட்டில் சாலை விபத்து உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைவு

by Arun Kumar

சென்னை: தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளில் (கொரோனா காலங்களைத் தவிர்த்து) சாலை விபத்து மரணங்கள் குறைவாக பதிவாகியுள்ளன. பலதரப்பட்ட முயற்சிகளால், 2017 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் மற்றும் மரணங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் சாலை விபத்து மரணங்களில் 15% குறைவு பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,864 மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 2025 இல் 4136 மரணங்களே ஏற்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், போக்குவரத்து ஓட்டத்தையும் சாலை பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக, தடுப்பு நடவடிக்கைகள், அவசர சேவைகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகிய மாற்றத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இம்முயற்சிகள் 15% உயிரிழப்புகளையும், மாரண விபத்துகளையும் குறைத்துள்ளன. இது புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

விரைவான அவசரகால நடவடிக்கைக்காக 24/7 நெடுஞ்சாலை ரோந்து, பாதுகாப்பான U-திருப்பங்கள் மற்றும் சாலைக் பதாகைகள் போன்றவற்றை கவனிக்காமல் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது 38.4 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் 62523 அதிக வேகம், 83.783 சிவப்பு விளக்கு தாண்டுதல், 113 லட்சம் வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துதல், 59.084 குடிபோதையில் வாகனம் ஒட்டுதல், 16.56 லட்சம் தலைகவசம் அணியாதது. 1.48 லட்சம் சீட் பெல்ட் அணியாதது, 110 லட்சம் உரிமம் இடைநீக்க பரிந்துரைகள் ஆகியவை அடங்கும். 2551 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தக்க நேரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 9,156 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இதன் மூலம் 571லட்சம் பொதுமக்களிடம் சென்று அடைந்துள்ளது. போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தியதன் விளைவாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது சாலைகளில் சட்டப்பூர்வமான முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது மற்றும் தொடர் விதி மீறலில் ஈடுபடுபவர்களை தடுக்கும் ஒரு வழியாக செயல்படுகிறது.

பாதுகாப்பான சாலை பயணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள். கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் நடத்தப்பட்டன. இதில் அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் நேரடி துண்டுப்பிரசுரம் வழங்குதல், வணிக வாகன ஓட்டுநர்களுக்கான குறியிடப்பட்ட பிரச்சாரங்கள் போன்றவை இடம் பெற்றன.

சிறப்பாக பணியாற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், 2,551 தீவிரமாக காயமடைந்தவர்களை மீட்டு, அவர்களை உயிர்காக்கும் நேரத்திற்குள் (Goldern Hours) மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லும் பணியில் முக்கிய பங்கு வகித்தன. மொத்தமாக 6,296 பேருக்கு காவல் ரோந்து வாகனங்கள் மூலம் உதவி வழங்கப்பட்டது.

இது விரைவு நடவடிக்கைகள் மற்றும் உயிர் காக்கும் முயற்சிகளில் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை காட்டுகிறது. இந்த மைல்கற்கள் காவல்துறை, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாகும்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi