சென்னை: அவிநாசி, மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்திற்காக 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை தர பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் -அவிநாசிக்கு இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மரங்கள் வெட்டியது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. மரங்களை வெட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட குழுவின் அனுமதி பெற்றதா? என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம்: மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக அரசு பதில் தர பசுமை தீர்ப்பாயம் ஆணை
0