Thursday, November 30, 2023
Home » வருவாய்த்துறையினர் துணையின்றி நிலங்களை ஆக்கிரமிக்கவோ, பட்டா பெறவோ முடியாது: ஐகோர்ட் கிளை

வருவாய்த்துறையினர் துணையின்றி நிலங்களை ஆக்கிரமிக்கவோ, பட்டா பெறவோ முடியாது: ஐகோர்ட் கிளை

by MuthuKumar

மதுரை: அரசு புறம்போக்கு நிலங்களை முறையான ஆவணங்களின்றி பட்டா போட்டுக்கொள்ளும் விவகாரத்தில் அரசு அலுவலர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ராமநாதபுரம் சாலை விரகனூர் சந்திப்பில் வைகை ஆற்றின் நீர் நிலை பகுதியில் கட்டிடம் கட்டபடுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அரசு புறம்போகாவே நீர்நிலை பகுதியாகவே இருந்தால் முறைபடி ரத்து செய்யப்படும் என் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. அரசு நிலம், அரசு புறம்போக்கு நிலம், நீர் பிடிப்பு பகுதிகள் குறித்து வருவாய்துறையினருக்கு தான் தெரியும். அவர்கள் துணையின்றி நிலங்களை ஆக்கிரமிக்கவே, ஆவணங்களை தயாரித்து பட்டா பெறவோ கட்டுமானம் மேற்கொள்ளவோ முடியாது என நீதிபதிகள் கூறினர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். சம்பந்தபட்ட பகுதியில் மதுரை ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் ஆவணங்களை மாற்றம் செய்து பட்டா பெற்றது தெரியவந்தால் பட்டாவை ரத்து செய்து ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?