சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக உள்ளார். அவரது சகோதரர் தலைமறைவாக உள்ளார். சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க நேரிடும். எனவே, அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
*ஏன் ஜாமீன் வழங்க கூடாது?
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை மோசமாக உள்ளது. அவரால் தொடர்ந்து சிறையில் இருக்க முடியாது. அதனால் அவரது மருத்துவ பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். மேல் முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து நாளை (இன்று) விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இந்த வழக்கை பொருத்தமட்டில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அப்படி இருக்கும் போது ஏன் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என கேள்வியெழுப்பினர்.