டேராடூன்: ரீல்ஸ் மோகத்தால் கங்கை நதியில் பெண் இழுத்து செல்லப்படும் வீடியோ வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய உலகில் சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக பலரும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இது, சில நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த ஒரு பெண் ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்று முன்தினம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண், தனது குடும்பத்தினரும் உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷிக்கு சென்றிருந்தார். மணிகர்ணிகா காட் அருகே கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடிஎடுத்துள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோவில், அப்பெண் அடித்து செல்லப்படுகையில், அவரின் குழந்தை தனது தாயை, ‘அம்மா.. அம்மா. என்று அழைப்பது’ பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பெண்ணின் உடலை மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.