டெல்லி: வரும் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது Blood Moon எனப்படுகிறது. ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022-க்கு பிறகு தற்போது 2 நாட்கள் இந்த நிகழ்வு வருகிறது.
இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. கிரகணத்தின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக நிலைநிறுத்தி, சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலை உருவாக்கும். வட மற்றும் தென் அமெரிக்காவில் இதை சிறப்பாக பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.