Friday, March 29, 2024
Home » அரசு கலை கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியீடு!

அரசு கலை கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியீடு!

by Francis
Published: Last Updated on

சென்னை: அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மே 8 முதல் 22ம் தேதி வரை இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நடைபெற்றது. 164 அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 1,07,395 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த நிலையில், அரசு கலைக்கல்லூர்களில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசைப்பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வருகிற 30-ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9-ம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 2-ம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது. கலந்தாய்வு நிறைவு பெற்றதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் ஜூன் 22-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi