ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 23 மீனவர்கள் நேற்று சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 14 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். ராபேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை 24 மணி நேரத்தில் சிறைபிடித்துச் சென்றது. இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 37 மீனவர்கள், 5 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.