மதுரை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 20 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரினர். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்த இறுதி உத்தரவுக்காக வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.