Monday, December 4, 2023
Home » ராஜஸ்தான் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன்; ரூ.500-க்கு சமையல் சிலிண்டர்: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன்; ரூ.500-க்கு சமையல் சிலிண்டர்: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

by Kalaivani Saravanan

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. ராஜஸ்தானில் கடைசிகட்ட தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் இறங்குவதால், தேர்தல் களம் பரபரப்படைந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

200 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட ராஜஸ்தானில், அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும், மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பா.ஜ.க-வும், தனது ஏழு முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்து காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு;

* ராஜஸ்தான் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்துள்ளபடி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.

* ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

* உள்ளாட்சி மன்ற அளவில் பணி நியமனத்துக்கு புதிய முறை கொண்டு வரப்படும்.

* ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என காங்கிராஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

* கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

* அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி திட்டம் அமல்படுத்தப்படும்.

* ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும்.

* ராஜஸ்தானில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வழங்கப்படும்.

* ராஜஸ்தானில் மாட்டுச்சாணம் கிலோ ரூ.2 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ.15 லட்சம் காப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?