Wednesday, November 29, 2023
Home » ரைத்து பரோசா திட்டத்தில் 53.53 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை 4 ஆண்டுகளில் ₹60 ஆயிரம் கோடி தானியங்கள் கொள்முதல்

ரைத்து பரோசா திட்டத்தில் 53.53 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை 4 ஆண்டுகளில் ₹60 ஆயிரம் கோடி தானியங்கள் கொள்முதல்

by Lakshmipathi

*ஆந்திர முதல்வர் பேச்சு

திருமலை : ஆந்திராவில் ரைத்து பரோசா திட்டத்தில் 5.53 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 4 ஆண்டுகளில் ₹60 ஆயிரம் கோடி தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் பேசினார்.ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியில் ஒய்எஸ்ஆர் ரைத்து பரோசா(விவசாயிகளுக்கு உத்தரவாதம்) திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் 5ம் ஆண்டாக 2வது தவணையாக தலா ₹4 ஆயிரம் என்று 53,053 விவசாயிகளுக்கு பணம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்று நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் ₹60 ஆயிரம் கோடி மதிப்பிலான தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பூஜ்ஜிய வட்டி என்பதன் உண்மையான அர்த்தத்தை விவசாயிகளுக்கு அளித்துள்ளோம். கடந்த காலங்களில் பூஜ்ஜிய வட்டி திட்டத்தை நீர்த்து போக செய்யும் முயற்சி நடந்தது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் ஹெரிடேஜ் நிறுவனம் மட்டுமே லாபமடைந்தது. விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் சந்திரபாபுவுக்கு வரவில்லை.

உங்கள் பிள்ளையின் அரசாங்கத்தில் கடவுளின் ஆசியால் நிறைவான மழை பெய்துள்ளது. கடந்த காலத்தில் இப்படி நடந்திருக்கிறதா?. சந்திரபாபுவின் அரசால் விவசாயத்திற்கு 7 மணிநேரம் கூட மின்சாரம் வழங்க முடியவில்லை. செய்யும் மனம் கொண்ட அரசுக்கும், மனம் இல்லாத அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை கவனிக்க வேண்டும்.

இன்று ஒவ்வொரு கிராமத்திலும் ரைத்து பரோசா கேந்திரம் செயல்படுகின்றன. ஆண்டுக்கு ₹13,500 உழவர் உத்தரவாத உதவியை வழங்கும் ஒரே அரசு உங்கள் ஜெகன்மோகன் அரசு. இந்த 4 ஆண்டுகளில் ₹7,800 கோடி மதிப்பிலான காப்பீடு வழங்கியுள்ளோம். சந்திரபாபு ஆட்சியில் 5 ஆண்டுகள் தொடர்ந்து வறட்சி நிலவியது. கடவுள் அருளால் கடந்த 4 ஆண்டுகளாக வறட்சியே இல்லை. 14 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சந்திரபாபு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த மாதத்திலேயே பிரதமர் கிசான் பணமும் விவசாயிகள் கணக்கில் செலுத்தப்படும்.

இதற்காக பிரதம மந்திரி கிசான் நிதியையும் விடுவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 53 லட்சத்து 53 விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ₹2,200 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பிரதமர் கிசான் பணம் வராவிட்டாலும் விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மாநில அரசு முன்கூட்டியே நிதி வழங்கி வருகிறது. மோசடிகள் மற்றும் பொய்களை நம்பாதீர்கள்.

இந்த 4 வருடங்களில் உங்கள் வீட்டில் நல்லது நடந்ததா? இல்லையா? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். உங்களுக்கு நல்லது நடந்தால் மட்டும் நீங்கள் எனக்கு ஆதரவு கொடுங்கள். ரைத்து பரோசா திட்டத்தில் மட்டும் விவசாயிக்கு ₹33 ஆயிரத்து 210 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு துணை நிற்க ₹1 லட்சத்து 73 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம். சந்திரபாபுவின் ஆட்சி அதிகாரம் அவரது கும்பலுக்குத்தான்.

சந்திரபாபுவுக்கு திருடவும், மறைக்கவும் தெரியும். சந்திரபாபு பெயரை சொன்னாலே மோசடிகள் தான் நினைவுக்கு வரும். மாநிலத்தை கொள்ளையடிக்க சந்திரபாபுவுக்கு அதிகாரம் தேவை. சந்திரபாபு ஆட்சியில் பைபர் கிரிட், உள்வட்ட சாலை, திறன் மேம்பாடு என்று அனைத்தும் சந்திரபாபு ஆட்சியில் நடந்த ஊழல்கள். உங்கள் அரசு ஏற்கனவே சகோதரிகளுக்கு ₹2 லட்சத்து 42 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு ஆட்சியில் இந்த பணம் அனைத்தும் யாரோ ஒருவர் கைக்கு சென்றது. சந்திரபாபு ஆட்சியில் நம் குழந்தைகளின் படிப்பு, பள்ளிகள் ஏன் மாறவில்லை? வீட்டிலேயே மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக குடும்ப மருத்துவர் மற்றும் கிராமிய கிளினிக் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆரோக்கியயின் சிகிச்சை முறையில் 3,300 விதமான சிகிச்சை அளிக்க உயர்த்தியுள்ளோம். எந்த ஒரு ஏழையும் மருத்துவ கடன் வாங்கக்கூடாது என்பதே என் நோக்கம். கிராம செயலகங்களில் மகளிர் காவல்துறையை நிறுவியுள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.

இதில் அமைச்சர்கள் ராமச்சந்திரா, கும்மனூரு ஜெயராம், உஷா ஸ்ரீசரண், அரசு கொறடா காப்பு ராமச்சந்திரா, எம்எல்ஏக்கள் துட்டுகுண்ட ஸ்ரீதர், சங்கர்நாராயணா, அனந்த வெங்கடராமி, தோபுதுர்த்தி பிரகாஷ், ஜொன்னலகட்டா பத்மாவதி, வெங்கடா, எம்பிக்கள் தலாரி ரங்கய்யா, கோரண்ட்லா, எம்எல்சிக்கள் மங்கம்மா, சிவராமி, ஜில்லா பரிஷத் தலைவர் போய கிரிஜம்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பதி: திருப்பதி மாவட்டம், வடமலாப்பேட்டை மண்டல மையத்தில் உள்ள விழா அரங்கில் ஒய்எஸ்ஆர் ரைது பரோசா- பிஎம் கிசான் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், இளைஞர் நலன் மற்றும் சுற்றுலா விளையாட்டு அமைச்சர் ரோஜா, கலெக்டர் வெங்கடரமண உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா பேசுகையில், ‘விவசாயி நன்றாக இருந்தால் நாம் அனைவரும் நன்றாக இருப்போம். விவசாயி வியர்வை சிந்தி அறுவடை செய்தால் தானியங்கள் கிடைக்கும்.

முதல்வர் ஜெகன்மோகன் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி பல விவசாயிகள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். விவசாய பரோசா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ₹13,500 நிதி உதவி, அம்மாஓடி, நேற்று இன்று, கோரமுத்தா, தலைமை செயலக அமைப்பு அமைத்தல் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறார். பூஜ்ஜிய வட்டியில் பயிர்க்கடன் வழங்குதல், இலவச பயிர் காப்பீடு அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு 9 மணிநேரம் தரமான மின்சாரம், இந்த பயிர் முன்பதிவு, பயிர் வழங்குதல், எந்த பருவத்திலும் பயிர் இழப்பு ஏற்பட்டால் பருவம் முடிவதற்குள் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது’ என்றார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?