சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், திருச்சியில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.