தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். தஜிகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று அதிகாலை 4.46 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சோனித்பூரில் பூமிக்கடியில் 13 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.