டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே புதிய நாடாளுமன்ற திறப்பு விழா பூஜையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக ஆதீனங்கள் அளித்த செங்கோலை பூஜையில் வைத்து பிரதமர் மோடி உள்ளிட்டோர் வழிபட்டனர்.