Sunday, June 15, 2025
Home செய்திகள் சென்னை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் 150 டாக்டர்கள் நியமனம்

சென்னை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் 150 டாக்டர்கள் நியமனம்

by Suresh

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை நீடிப்பதாகாவும், பணியாற்றும் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வேலைக்கு வர மறுப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து நகரத்தில் வசிப்பவர்களுக்கு இலவச சேவைகளை மேம்படுத்த, சென்னை மாநகராட்சி வேண்டுகோளை ஏற்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் 150 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப நகர்ப்புற சுகாதார மையங்களில் நிரந்தர மருத்துவர்கள் தங்கள் பணியை தொடங்குவார்கள். முன்னதாக, சென்னை மாநகராட்சியில் ஆரம்ப நகர்ப்புற சுகாதார மையங்களில் தற்காலிக மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஒப்பந்தத்தில் உள்ள மருத்துவர்களுக்கு போதுமான அளவு சம்பளம் இல்லாத காரணத்தினால் வேலையை விட்டு சென்றுவிடுகின்றனர். தற்போது நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்படுவதால் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கும்.

சென்னை போன்ற பெருநகரத்தில் மருத்துவமனையில் பணியாற்றுவது அநேகமாக பல மருத்துவர்களுக்கு கனவாக கூட இருக்கும். மேலும் புதிய மருத்துவர்கள் நீண்ட நாட்களுக்கு ஒரே மருத்துவமனையில் பணியாற்றவும் வாய்ப்புள்ளது. இதனால் நோயாளிகள் ஒரே மருத்துவரைப் பின்பற்றி சிகிச்சை பெற்வர். இது பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi