அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்பாக்கத்தில் தண்டவாள இணைப்புகளில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி. சிசிடிவி கேமராக்களை காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சாமியார் ஒருவர் சதிச் செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. சாமியார் புகைப்படத்தை தமிழ்நாடு, ஆந்திராவுக்கு அனுப்பி வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.