சென்னை: தமிழ்நாட்டில், கடந்த 2 ஆண்டில் ரூ.5000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை திமுக அரசு மீட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறை செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.
ரூ.5000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை 2 ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள், 1000வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணமான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள், அலுவலர்களை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.