திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடுகாடு ஊராட்சியில், நிதி இழப்பு செய்தும் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பாஜக ஊராட்சி மன்ற தலைவர் பி.வெங்கடேசன் என்பவரை பதவிலிருந்து நீக்கி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊராட்சிக்கு நிதி இழப்பு செய்தது நிரூபணம் ஆனதால், ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 205 படி திருவள்ளுர் ஊரக வளர்ச்சி ஆய்வாளர் ஆய்வு செய்ததின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பாஜக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்
132
previous post