காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் (24ம் தேதி) நாளை பிற்பகல் 3 மணியளவில் மறைமலைநகர், பொத்தேரியில் நடைபெறுகிறது. இதில், மாவட்ட அவை தலைவர் துரைசாமி தலைமமை தாங்குகிறார். பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், திமுக நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில், கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.