சென்னை: போரூரில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்தின் 2வது தளத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அனுமதியின்றி கட்டிய 2வது தளத்தை 8 வாரத்தில் இடித்து அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். செங்கன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் அனுமதியின்றி 2-வது தளம் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வரைபட அனுமதிப்படி கட்டடம் கட்டப்படாததால் விதி மீறல்கள் இருப்பதாக வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.