கூடலூர்: தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச்சாலையில், அடிவாரத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று மர்ம விலங்கால் வேட்டையாடப்பட்டு, உடல் சிதைந்த நிலையில் மான்குட்டி ஒன்று இறந்து கிடப்பதை அப்பகுதி வழியாக சென்றவர்கள் கண்டனர். இதையடுத்து சிறுத்தை தாக்கி மான் இறந்திருக்கலாமோ என்ற அச்சத்தில் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இறந்த மான்குட்டியின் உடலை மீட்டனர்.