சென்னை: புலவர் மா.நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புலவர் மா.நன்னன் அகமும் புறமும் அப்பழுக்கற்றவராக விளங்கியவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் பெரியார், கலைஞர், மா.நன்னன் உள்ளிட்டோர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக மொழிக்காக பாடுபட்டவர்கள் என புலவர் மா.நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் உரையாற்றினார்.