டெல்லி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை பிரதமர் நரேந்திர மோடி நடத்த உள்ளார். மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிகிறார். மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரணம் விவரங்கள் உள்ளிட்டவற்றை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.