Friday, June 20, 2025
Home செய்திகள்Showinpage பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

by MuthuKumar

செய்யாறு: செய்யாறு அருகே மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அத்தையின் கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே ஊரில் வசிக்கும் மாணவியின் அத்தையின் கணவர் கணபதி(50).

இவர் மாணவியை கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதை சாதகமாக்கிக்கொண்ட கணபதி, மாணவியை தொடர்ந்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி 2 மாத கர்ப்பிணியானார்.

இதையறிந்த கணபதி, மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கிக்கொடுத்து கருவை கலைத்துள்ளார்.
இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் சில தினங்களுக்கு முன் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கேட்டபோது நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணபதியை இன்று காலை கைது ெசய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi