சென்னை: கல்விநிதி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டோம்.
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கல்விநிதியை கேட்கிறோம். தமிழ்நாடு எப்போதும் மும்மொழி கொள்கைக்கு எதிரானது. மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.