திருவாரூர்: திருவாரூர் அருகே சத்து மாத்திரையில் ஸ்டேபிளர் பின் இருந்த விவகாரத்தில், கர்ப்பிணி பெண் வீடியோ வெளியிட்ட நிலையில், விசாரணை நடத்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட வீராக்குடி பகுதியில் வசித்து வருபவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே 4 வயதில் மகன் உள்ள நிலையில், தற்போது ஜெயந்தி 9மாத கர்பமாக உள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் புதன் கிழமை வாராந்திர பரிசோதனைக்காக பூந்தோட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்ததிற்கு சென்று மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்ற பிறகு சத்து மாத்திரை வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற ஜெயந்தி, மாத்திரையில் ஸ்டேபிளர் பின் இருப்பதை அறிந்துள்ளார். இதையடுத்து பூந்தோட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்ததில் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.