மதுரை: கோயில் அருகே தேவாலயம் கட்டுவதால் மனுதாரருக்கு என்ன பிரச்னை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் மத நல்லிணக்கமே ஏற்படும், அனைவருக்கும் அனைத்து உரிமையும் இங்கு உண்டு என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்தில் ஊர்காத்த சாமி கோயில் அருகே தனியார் இடத்தில் தேவாலயம் கட்டுவதற்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.