சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திவ்யதேசம் பயணத்திட்டத்தின் கீழ் பெருமாள் கோயில்களுக்கு ஒரு நாள் சுற்றுலா தொடங்கியுள்ளது என இயக்குநர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் திவ்யதேசம் பெருமாள் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம்-1, பயணத்திட்டம் 2, அதேபோல் மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து திவ்யதேசம் பெருமாள் கோயில் என ஒரு நாள் சுற்றுலா மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. திவ்யதேசம் பெருமாள் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண்.180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.