சேலம்: சேலம் பெரியார் பல்கலை. முறைகேடு வழக்கு தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதனிடம் நடந்த விசாரணை நிறைவு அடைந்தது. சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆஜாரான ஜெகநாதனிடம் 5 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. விதிகளை மீறி தனியார் அமைப்பை தொடங்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக துணைவேந்தர் மீது புகார் அளிக்கப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்தது.
பெரியார் பல்கலை. முறைகேடு வழக்கு: துணைவேந்தர் ஜெகநாதனிடம் நடந்த விசாரணை நிறைவு
0
previous post