Saturday, July 12, 2025
Home செய்திகள்Showinpage பெரம்பூரில் லாரி மோதி சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவு

பெரம்பூரில் லாரி மோதி சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவு

by Lavanya

சென்னை: சென்னை பெரம்பூரில் லாரி மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் யாமினி. இவருக்கு, ஒரு மகனும், 10 வயதில் செளமியா (10) என்ற ஒரு மகளும் உள்ளனர்.செளமியா, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், (ஜூன் 18) காலை 8.15 மணியளவில், அவரை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் தாயார் யாமினி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது யாமினி சடன் பிரேக் பிடித்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து சிறுமி தவறி கிழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து, இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து போலீசார், லாரி ஓட்டுநரான கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பீக் நேரத்தில் தண்ணீர் லாரி சாலையில் சென்றதைத் தடுக்க தவறிய 2 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதாவது, பீக் அவர்ஸ் என்று கூறப்படும் காலை 8 – 10 மணி வரை, பொதுமக்கள் அதிகம் செல்லும் சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. கனரக வாகனங்களை அனுமதித்ததற்காக செம்பியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணியை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார் .

அதேபோல், போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிலையில், இன்றைய தினம் காவல் ஆணையர் அருண் கூறியதாவது, காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க உத்தரவிட்டார். பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கவும். பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள் உட்பட கனரக வாகனங்களை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi