பெரம்பலூர் : பெரம்பலூர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டபோது ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜோசப் பள்ளி அருகே கார் மீது டிராக்டர் மோதியதில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது இந்த விபத்து நடந்துள்ளது.ஆம்னி பேருந்து மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரஜேந்திரன், காரில் பயணம் செய்த குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோர் உயிரிழந்தனர்.