சென்னை: சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் அக்.25-ல் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல், நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு தொடர்பாக தலைமை செயலகத்தில் அக்.25-ல் ஆலோசனை நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டிலிருந்து 40 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.