திருத்தணி: திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் அங்கன்வாடி மையத்தில், 15 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றி அடர்த்தியாக செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொட்டியை சுற்றியும் செடி கொடிகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இக்கட்டிடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் கட்டிடத்தின் சுவர்கள் விரிசல் விட்டும், மேல் தளம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து பலவீனமாக காட்சி அளிக்கிறது.

Advertisement


