திண்டுக்கல்: பழனியில் நேற்றிரவு பெய்த மழையால் தற்காலிக பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெருமாள்புதூர் பச்சைஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. பெருமாள்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் பாலத்தை சரி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.